ஈரானில் பயணிகள் விமானத்தைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையினர் அறிவித்துள்ளனர்.
ஈரான்-ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான IA-334 ஃபோக்கர் 100 பயணிகள் விமானம் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து மஷாத் நோக்கி வியாழக்கிழமை இரவு 10.22 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
விமானத்தில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இருந்துள்ளார். இதனையடுத்து புறப்பட்டுச் சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கியது. சந்தேக நபர் குறித்து ஈரான் புரட்சிகர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தரையிறங்கிய விமானத்தில் இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் விமானத்தைத் திசைதிருப்பி அதனைக் கடத்த முயன்றாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.